எனது பொன்மொழிகள்

v 1) பெரியத் தோல்வியைச் சந்திக்க வேண்டுமாயின் ,அதிகமாக ஆசைப்படு.
v 2) அனுபவத்தினைக் கற்றுக்கொள்வதைவிட ,உன்னை சாதிக்க வைக்கும்போதுதான் அனுபவம் முழுமை அடைகிறது.
v 3) இரு கைகளிருந்தும்,நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்தால் அந்த வாழ்க்கையே ஊனம்தான்.
v 4) பிரிவினால் ஒருவரை முழுமையாக நேசிக்க முடியுமேயானால் ,அந்த பிரிவினையும் முழுமனதோடு காதலி..
v 5) பாசத்தை அளவிடும் ஒரு கருவி பிரிவு...
v 6) சுயநலமும் போற்றுதலுக்குரியது,அடுத்தவரைப் பாதிக்காத வரையில் மட்டும்.
v 7) எந்தப்போட்டியானாலும் சிலரின் தோல்வியே, சிலருக்கு வெற்றி.
v 8) நீ யாருக்காகவும் காத்திரு(க்காவிடிலும்) , உனக்காக யாரையும் காத்திருக்க வைக்காதே.
v 9) கத்தியின் வலிமை அதன் கூரிய முனையிலன்று.அதைப் பயன்படுத்துவரின் புத்தின் சக்தியில் உண்டு.
v 10) நேரம் தவறாமைக்கு சிறந்த முன்மாதிரி கடிகார முட்களே.
v 11) தவறு செய்யும்போது வரும் துணிச்சல், அதற்காக மன்னிப்புக் கோரும்போது வருவது கிடையாது.
v 12) ஒருவரோடு ஒப்பிட்டுப் பேசும்போது , அந்தக்கணம் உயர்ந்தவனும் தாழ்ச்சியடைகிறான்.

v 13) கனவுகள்கூட மாறலாம்,ஆனால் கனவுகளை அடைவதற்கான முயற்சி மட்டும் மாறக்கூடாது.

Comments