புத்துயிர் தந்த ம(வ)ரம்

மரங்களையெல்லாம்
வெட்டி வீடு        
கட்டினவர்களுக்கு
புத்திவந்துவிட்டது போலும்...
அனைவரும் வீட்டில்
போன்சாய் மரம்
வளர்க்கின்றனர்...


நகரமயம் ஆகுவதால்
நகரமயானத்தில்
மாயமாகும் இனம்தான்
மரங்கள்...

அவற்றிற்கு புத்துயிர்
அளிக்க வரமாக
வந்தவைதானோ
தொட்டிமரம் என்ற போன்சாய்...


(குறிப்பு: சாதாரண மரங்களைப்போலவே போலவே தொட்டிமரங்களும் ஒளிச்சேர்க்கை,சுத்தமான காற்று,பழங்களை கொடுக்கவல்லது.)

Comments